'ஸந்த்', 'துகோபா'வின் மகன் 'தபோநிதி நாராயண் மஹராஜ் தேஹுக'ருக்கு எங்கள் பணிவான வந்தனங்கள்

Article dated 4 Aug 2022 

இந்த பத்தியில் உள்ள கருத்துக்களுக்காக உங்கள் அனைவருக்கும் இதை மொழிபெயர்க்க வேண்டும் என்று தோன்றியது.


 இன்று 'சிரவண சுத்த சதுர்த்தி'.  'பால்கி ஸோஹலா' ஏற்படக் காரணமாகவும் பெரும் தவசீலராகவும்  இருந்த  'ஸ்ரீ நாராயண் மஹராஜ்' தேஹுகர்' இந்த  உலகத்தை விட்டு மறைந்த நாள்.


 'தபோநிதி நாராயண் மஹராஜ் தேஹுகர்', 'ஸந்த் துகாராம் மஹராஜின்' இளைய பிள்ளை.  'ஸந்த் துகாராம் மஹராஜின்' 'ஸதேஹ வைகுண்ட கமன'த்துக்குப் பிறகு, 3 - 4 மாதங்களுக்குப் பிறகு அவரது தாயார் 'ஜிஜாயி' அவரைப் பெற்றெடுத்தார்.   அதனால்  'நாராயண் மஹராஜ்' க்கு தனது தந்தையின் அன்பும், அரவணைப்பும் கிட்டவில்லை.

'துகோகாபாராயின்' சகோதரர்  'கன்ஹோபாராய்' அவரை மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டார்.


 'மஹீபதி பாபா' வின் 'ஸந்த் துகாராம்' வாழ்க்கை சரிதத்தில் இருந்து இது தெரிய வருகிறது, 'விஸ்வம்பர் பாபா' இந்த பரம்பரையின் புகழ்பெற்ற மூதாதையர்: அவருக்கு முன்பே, முன்னோர்கள் 'பண்டரி வாரி' பாரம்பரியத்தை  இடைவிடாது  தொடர்ந்து பின்பற்றி வந்துள்ளனர்.  விஸ்வம்பர் பாபாவின் தாய் அவரிடம் கூறியதாவது :

 உங்கள் தந்தையர் மற்றும் தாத்தாக்கள் அனைவரும் |

 இடைவிடாது அவர்கள் 'பண்டரி வாரி'  செல்வதை உறுதி செய்தனர் ||

 என்ன வந்தாலும், எந்த இடைவெளியும் உள்ளே நுழைய விடாதீர்கள் |

 அப்போதுதான் இவ்வுலகில் உங்கள் வாழ்வு பலன் தரும் ||


 இதே 'விஸ்வம்பர் பாபா' தான் 'விட்டலன்' மற்றும் 'ரகுமாயியின்' முதல் 'மூர்த்திகளை' தனது வீட்டில் ப்ரதிஷ்டை செய்தவர்.  14 'தால்கரிகள்' மற்றும் வேறு சில 'வார்க்கரிகள்' இணைந்து, தனது முன்னோர்களால் பின்பற்றப்பட்ட இந்த பாரம்பரியமான 'திண்டி ஸோஹலா' ஒரு இடைவெளி இல்லாமல் பின்பற்றப்படுவதை 'துகோபா' உறுதி செய்தார்.


 பண்டரி வாரி என் இல்லத்தில்  உண்டு |

 நாங்கள் வேறு எந்த 'தீர்த்த வ்ரதமும்' ஏற்பதில்லை ||


 'துகோபா'வின் 'ஸதேஹ வைகுண்டகமன'த்தின் பின்னர், 'கான்ஹோபாராய்' மற்றும் 'துகோபாவின்' மகன் 'மகாதேவ்புவா' மற்றும் 'விட்டல்புவா' ஆகியோர், ' பண்டரி' வரை  இந்த  'திண்டி ஸோஹலா'வை   தொடர்ந்தனர்.  முதுமையின் காரணமாக, 'கன்ஹோபாராய்' , 'துகோபாராயின்' இளைய மகன் 'நாராயண் மஹராஜிடம்'  இதை ஒப்படைத்தார்.  அவர் சில 'வார்கரிகளுடன்' இணைந்து 'பண்டரி வாரி'  செல்லத் தொடங்கினார்.  சிறிது காலத்திற்குப் பிறகு , இந்த 'வாரி'யில் 'பாகவத தர்மத்தின்' 'கலசம்' (கிரீடம்)ஆக விளங்கும் அதாவது 'துகோபா' மற்றும் 'பாகவத தர்ம' த்தின்' 'பாய' (அடித்தளம்)  அதாவது 'ஞானோபா' இருவரும் இருந்தால்,   'பண்டரி வாரி' இன்னும் நிறைவாகவும்  'பக்தி' நிறைந்ததாகவும்  இருக்கும்  என்று அவர் தனக்குள் உணர ஆரம்பித்தார். இந்த உயிரும் சுவாசமும் ஒன்றாக இருந்தால், இந்த வாழ்க்கை வாழ்ந்த நிறைவு  இருக்கும் என்று அவர் உணரலானார்.  இந்த நோக்கத்துடன், ஷா.1685 இல், 'ஜ்யேஷ்ட கிருஷ்ணபக்ஷ சப்தமி' அன்று, அவர் 'பால்கி ஸோஹலா' வைத் தொடங்கினார்.  'தேஹு'வில் இருந்து 'ஸந்த் துகாராம்'  பாதுகையை எடுத்துக்கொண்டு 'ஆலந்தி' செல்வது வழக்கம்.  அங்கு அவர் 'மாவுலி பாதுகை'யை  'பால்கி' மீது வைப்பார்.  எனவே, அதே 'பால்கி'யில், 'துகோபா' மற்றும் 'மாவுலி ஞானேஷ்வர்' ஆகிய இருவரின் 'பாதுகைகள்'  வைக்கப்பட்டு, 'பால்கி ஸோஹலா' 'பண்டரி' வரை செல்லும்.  தெய்வீக 'பக்தி நிறைந்த' சூழ்நிலையில்   'ஸோஹ்லா'வில் 'நாராயண் மஹராஜ்' 'கீர்த்தனை' மற்றும் 'பஜன்' நடத்துவார்.தெய்வீக'பக்தி நிறைந்த' சூழல்' நிலவும்.

 தற்போதைய காலத்தின் 'பண்டரி வாரி'யில் தெய்வீகமாக முழங்கப்படும் 'ஞானோபா - துகாராம்' என்ற கர்ஜனை முழக்கம் 'நாராயண் மஹராஜ்' அவர்களால்தான் தொடங்கப்பட்டது.


 1680ல் 'சத்ரபதி சிவாஜி'யின் மறைவுக்குப் பிறகு, 'அவுரங்கசீப்' தனது சில லட்சம் பேருடன் 'மகாராஷ்டிரா'வில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டார்.  அவர் எல்லோரையும் மிகவும் துன்புறுத்தத் தொடங்கி அத்துமீறலானார் .  இந்த சமயத்தில் தான், 'நாராயண் மஹராஜ்' 'பால்கி ஸோஹலா'வைத் தொடர வைத்து, 'வார்காரி சம்பிரதாயத்தில்' மிகவும் துணிச்சலான நடவடிக்கையை எடுத்தார்.  'சத்ரபதி ஷம்புஜி', 'தேஹு'வுக்கு அடிக்கடி 'தரிசனம்' செய்ய வருவார்.  அவர் 'நாராயண் மஹராஜ்' உடன் மிகவும் நெருக்கமான மற்றும் அன்பான உறவைக் கொண்டிருந்தார்.  'சத்ரபதி ஷம்பு மஹராஜ்' இந்த 'பால்கி ஸோஹலா'விற்கு 'முகலாயர்களிடமிருந்து' எந்த பிரச்சனையும் வரக்கூடாது  என்பதற்காக பாதுகாப்பு அளித்தார்.  1689 இல் 'தர்மவீர் சத்ரபதி ஷம்பு மஹாராஜ்'  இறந்த பிறகு, 'சத்ரபதி ராஜாராம்' இந்த பாதுகாப்பைத் தொடர்ந்தார்.


 இளைஞர்களும் முதியவர்களும் வாருங்கள் |

 நீங்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் || இவ்வாறு அனைத்து 'வார்காரி சம்பிரதாய' த்துக்கும்', அனைத்து சாதி மற்றும் சமய மக்களுக்கும், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள், ஆண் மற்றும் பெண் என அனைத்து மக்களுக்கும், 'நாராயண் மஹராஜ்' தொடர்ந்த 'பால்கி ஸோஹலா' மகிழ்ச்சியின்உச்சத்தை அளித்தது, அதன் மீது தீராத ஏக்கத்தை உருவாக்கியது.  இந்த உலகம் முழுவதும் வரலாறு படைத்தது.'


'வார்கரி சம்பிரதாய' த்தின் கடைசி கலங்கரை விளக்கங்களில் ஒருவரான - 'பிம்பால்னரில்' இருந்த 'ஸந்த் நிலோபராய்' என்பவர், 'நாராயண் மஹாராஜின்' ஆன்மீக வழிகாட்டுதலால் பயனடைந்தவர்.  மிகக் குறுகிய காலத்தில், அவரது பங்களிப்புகளால், 'வார்கரி சம்பிரதாயத்தில்' உள்ள அனைவரும் அவருக்காக ஏங்கத் தொடங்கினர், மேலும் அவர் அவர்களின் உயிராகவும் சுவாசமாகவும் மாறினார்.


 அனைத்து 'வைஷ்ணவர்களும்' அவரைத் தங்கள் உயிராகவும் சுவாசமாகவும் உணர்ந்தனர் |

 அது 'நாராயண் தேஹுகர்' ||


 அந்த அதீத தூய்மையான, 'ஸந்த்', 'துகோபா'வின் மகன் 'தபோநிதி நாராயண் மஹராஜ் தேஹுக'ருக்கு எங்கள் பணிவான வந்தனங்கள்.


 நாங்கள் எங்கள் சிரஸை  'வார்க்கரி ஸந்த்துக்கள்' சரணங்களில் வைக்கிறோம்.


 ராம்கிருஷ்ணஹரி.

Comments

Popular posts from this blog

Haripath of Sant Jnaneshwar Mavuli - Lyrics in Marathi & Meanings in English

Kanadiya Vithoba Kanadiya