பாண்டு³ரங்கா³ கரூ ப்ரத²ம நமன | Panduranga karoo pradhama naman


 

ராம்கிருஷ்ணஹரி.

 ஆன்மீகம் மற்றும் தொடர்புடைய விஷயங்களுக்கு வரும்போது தத்துவங்கள், வழிமுறைகள், வாசிப்புப் பொருட்கள், சொற்பொழிவுகள் போன்றவை ஏராளமாக உள்ளன.  பெரும்பாலும், இவை அனைத்தும் ஓர் ஆர்வலரை குறிப்பாக அவர், இவற்றில் ஒரு திறமை மிக்கவரின் கவனமான பார்வையில் இல்லை என்றால் குழப்பவோ அல்லது தடுக்கவோ முனைகின்றன.  எளிய, பயனுள்ள, சுவாரசியமான, ஊக்கமளிக்கும், இன்னும் பிரம்மாண்டம் நிறைந்த பாதையும் முறையும் சாமானியனுக்குத் தேவை.  நம்மீது திணிக்கப்படும் அல்லது நமது இயற்கையான போக்குகளுடன் ஒத்துப்போகாத எந்தப் பாதையையும் நாம்  ஏற்கத் தவறிவிடுகிறோம் அல்லது   நம்பிக்கை இல்லாத தயக்கத்துடன் நம்மை அதில் ஈடுபட வைக்கிறது .  இருப்பினும் பகவானை அடைவதே இறுதி இலக்கு.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, நாம் இப்போது ‘ஸந்த் துகாராம்’ அவர்களின் ஓர் அபங்கத்தை அனுபவிப்போம்.  இது மிகவும் குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இது சாராம்சத்தில் அவரது சொந்த அனுபவம் மற்றும் அவரது ஆன்மீக பயணத்தில் குறிப்பிடத்தக்க அவர் தெரிந்து கொண்ட விஷயங்களையும் தெளிவுபடுத்துகின்றது.  எனவே, இந்த அபங்கத்தை முழுமையாக 100 சரணங்களுடன், உள்ளது உள்ளபடி எந்த கூடுதல் விளக்கங்களும்  இல்லாமல்  அனுபவிப்பதே சாலச் சிறந்தது.

    

பாண்டு³ரங்கா³ கரூ ப்ரத²ம நமன . து³ஸரே சரண ஸந்தாஞ்சியா..1..

 நான் முதலில் ‘பாண்டுரங்கன்’ சரணங்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்.  அடுத்து ஸந்த்துக்களின் சரணங்களில்.

  யாஞ்ச்யா க்ருʼபாதா³னே கதே²சா விஸ்தாரு . பா³பா³ஜீ ஸத்³கு³ருதா³ஸ

  அவருடைய க்ருபையால் இந்த விளக்கத்தை மேலும் விரிவுபடுத்துகிறேன்.  இந்த ‘துகா’ ‘பாபாஜி ஸத்குரு’வின் வேலைக்காரன்.

  காய மாஜீ² வாணீ மானேல ஸந்தாம்ʼஸீ . ரஞ்ஜவூ சித்தாஸீ ஆபுலியா ..3..

 

  எனது வார்த்தைகள் ஸந்த்துக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் உங்கள் இதயங்களை மகிழ்விப்பதற்கும்  உகந்ததாக உள்ளதா?

 

யா மனாஸீ லாகோ³ ஹரிநாமாசா ச²ந்த³ . ஆவடீ³ கோ³விந்த³ கா³வயாஸீ ..4..  

 

  ‘ஹரி’ நாமங்களை உச்சரிக்கும் ஆசையும், ‘கோவிந்த’ னின் நாமங்களைப் பாட வேண்டும் என்கிற  ஆசையும் இந்த மனதில் வசப்படட்டும்.

 

ஸீண ஜாலா மஜ ஸம்ʼவஸார ஸம்ப்⁴ரமே . ஸீதள யா நாமே ஜாலீ காயா..5..

 

  இந்த உலக வாழ்க்கை  என்னை மிகவும் பலவீனப்படுத்திவிட்டது.  அவரது நாமத்தை உச்சரிப்பது இந்த முழு சரீரத்தையும் அமைதிப்படுத்தி விட்டது.

 

யா ஸுகா² உபமா நாஹீ த்³யாவயாஸீ . ஆலே ஆகாராஸீ நிர்விகார ..6..  நான் அனுபவிக்கும் அமைதிக்கு, ஈடாகக் காட்டுவதற்கு சமமான எதுவும் இல்லை.  உருவமற்றது இப்போது ஒரு வடிவத்துடன் வந்துள்ளது.

 

நித்ய தா⁴வே தேதே² நாமாசா க³ஜர . கோ⁴ஷ ஜயஜயகார ஆஇகதா ..7.. 

 

மகிழ்ச்சியான கொண்டாட்டக் கூச்சலுடன் அவரது கோஷத்தின் கர்ஜனை வெளிப்படும் இடத்தை நோக்கி அதைக்கேட்டு நான் ஓடுகிறேன்.

 

தாதடீ³ தே காய ஹரிகு³ண கா³ய . ஆணீக உபாய து³꞉க²மூள ..8..

 

  உடனே ‘ஹரி’யின் குணங்களைப் பாட வேண்டும்.  எல்லா வலிகளையும் குணப்படுத்த வேறு எந்த மருந்தும் இல்லை.

 

மூள நரகாசே ராஜ்ய மதே³ மாதே . அந்தரே ப³ஹுத தே³வ து³ரீ ..9..

 

  ஒரு ராஜ்யத்தை அடைவது ஒரு தலைக்கனம் நிறைந்த அகந்தையுடன் தொடர்புடையது. மற்றும் அது நிச்சயமாக நரகத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.  அது நமக்கும் பகவானுக்கும் இடையே ஒரு பெரிய பிளவை உருவாக்கி அவரை வெகு தொலைவில் வைத்திருக்கிறது.

 

து³ரீ அந்தரலா நாமனிந்த³காஸீ . ஜைஸே கோ³சிடா³ஸீ க்ஷீர ராஹே ..10 

 

 பகவானின் பெயரைக் கெடுக்கும் நபர்களுக்கு, பகவான் அடைய முடியாதவர். இவர்கள் பசுவின் மடியிலிருந்து இரத்தத்தை உண்ணும் பூச்சி போன்றவர்கள். அதற்கு பதிலாக அதிலுள்ள பாலை உண்ணலாம்.

 

ஹே வாட கோ³மடீ வைகுண்டா²ஸீ ஜாதா . ராமக்ருʼஷ்ணகதா² தி³ண்டீ³ த்⁴வஜா ..11 

 

  இந்த பாதை இனிமையானது மற்றும் ஒருவரை ‘வைகுண்டத்திற்கு’ அழைத்துச் செல்கிறது.  ‘திண்டி’ மற்றும் கொடியுடன் ‘ராமர்’, ‘கிருஷ்ணர்’ கதைகளின் அடிச் சுவடு.

 

 ஜாணதே தயாம்ʼநீ ஸாங்கி³தலே கரா . அந்தராஸீ வாரா ஆடூ³னியா ..12  

 

அறிவுள்ளவர்கள், அறிவாளிகளின் அறிவுரைகளைப் பின்பற்றி நடந்து கொள்ளுங்கள்.  பிளவை உருவாக்கும் அகந்தையை இது தடுக்கும்.

 

  யாஸீ ஆஹே டா²வே பரி அந்த⁴ ஹோதீ . விஷயாசீ க²ந்தீ வாடே ஜனா ..13..

 

  இது உணரப்பட்டது, ஆனால் மக்கள் கண்மூடித்தனமாக, உலக இன்பத்திற்காக ஏங்குகிறார்கள்.

 

  நாஹீ த்யா ஸுடலீ த்³ரவ்ய லோப⁴ மாயா . ப⁴ஸ்ம த³ண்ட³ சா²யா தருவராசீ ..14..

 

  சாம்பலைப் பூசிக் கொண்டும், கையில் தடியைப் பிடித்துக்கொண்டும், மரத்தின் நிழலில் (ஒதுங்கியவர் போல) அமர்ந்தாலும் மாயையான ஜடவுலகின் மீதான ஈர்ப்பை அவர்களால் விட்டுவிட முடியவில்லை.

 

  சித்த ஜ்யாசே புத்ர பத்னீ ப³ந்தூ⁴வரீ . ஸுடல ஹா பரி கைஸே ஜாணா ..15..

 

  தனது சந்ததியினர், மனைவி மற்றும் சகோதரர்கள் மீது மட்டுமே பற்றுடன் இருக்கும் ஒருவர் எப்படி  கரையேற முடியும்  என்று சொல்லுங்கள்?

 

..15..

 

ஜாணதே நேணதே கரா ஹரிகதா² . தரால ஸர்வதா² பா⁴க மாஜீ² ..16..

 

உங்களுக்கு இது குறித்து தெரிகிறதோ இல்லையோ ‘ஹரி’யின் நாமங்களைப் பாடுவதில் ஈடுபடுங்கள்.  தவறாமல் கரையேறுவீர்கள் ;  இதற்கு நான் உறுதியளிக்கிறேன்.

 

மாஜீ² மஜ அஸே க⁴ட³லீ ப்ரசித . நஸேல பதித ஐஸா கோணீ ..17..

 

 எனக்கு என் சொந்த அனுபவம் உண்டு.  என்னை விட மோசமான பாபம் செய்தவன் யாரும் இல்லை என்றுதான் கூறுவேன்.

 

கோணீ தரீ காஹீ கேலே ஆசரண . மஜ யா கீர்தனேவிண நாஹீ ..18..

 

 எந்த ஒழுக்கத்தையும் யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம்.  நான் இந்த ‘கீர்த்தனை’யைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை.

 

நாஹீ ப⁴ய ப⁴க்தா தராயா போடாசே . தே³வாஸீ தயாசே கரணே லாகே³ 19..

 

 ஒரு பக்தன் தனது வயிற்றை நிரப்புவதைப் பற்றியோ அல்லது இரட்சிப்பைப் பற்றியோ பயப்பட வேண்டியதில்லை, ஏனெனில் அவை இப்போது பகவானால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

 

 லாகே³ பாடோ²வாடீ பாஹே பாயாம்ʼ கடே³ . பீதாம்ப³ர க²டே³ வாட ஜா²டீ³ ..20

 

 அவர் நம் பாதையில் நமக்குப் பின்னாலும், முன்பக்கத்திலும், அவருடைய கண்களை நம் கால்களில் நிலைநிறுத்தி, இந்த அங்கியைக் கொண்டு நம் பாதையிலிருந்து கற்களைப் பெருக்கி அகற்றுவார்.

 

 டி³ங்கோனியா கா ரே ராஹிலே ஹே லோக . ஹே சி கவதுக வாடே மஜ ..21..

 

இந்த மக்கள் ஏன் இந்த ஜடவுலகில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு ஓர் உண்மையான ஆச்சரியம்தான்.

 

ஜயானே தாரிலே பாஷாண ஸாக³ரீ . தோ த்⁴யா ரே அந்தரீ ஸ்வாமீ மாஜா²..22..

 

 கற்களையும் பாறைகளையும் கடலில் மிதக்க வைத்தவர் ;  என் அன்பர்களே!  என்னுடைய அந்த பகவானை உங்கள் இதயங்களில் வைத்திருங்கள்.

 

மாஜி²யா ஜீவாசீ கேலீ ஸோட³வண . ஐஸா நாராயண க்ருʼபாளு ஹா ..23.. 

 

 என் வாழ்வின் கரையேறுதல் அவரால் நிறைவேற்றப்பட்டது.  ‘நாராயணன்’ அப்படிப்பட்ட இரக்க குணம் கொண்டவர்.

 

ஹா சி மாஜா² நேம ஹா சி மாஜா² த⁴ர்ம . நித்ய வாசே நாம விடோ²பா³சே ..24..

 

இது என் ஒழுக்கம்;  இது எனது நேர்மையான நடத்தை, அது தினமும் ‘விட்டோபா’ நாமத்தை ஜபிப்பதாகும்.

 

சேதவலா அக்³னி தாபத்ரயஜ்வாள . தோ கரீ ஶிதள ராமநாம ..25..

 

  மூன்று வகைத் தாபங்களால் பற்றவைக்கப்பட்ட நெருப்பிலிருந்து வெளிப்படும் தீப்பிழம்புகள் ‘ராம’ என்ற நாமங்களால் குளிர்விக்கப்படுகின்றன.

 

மனா தீ⁴ர கரீ த்³ருʼட⁴ சித்தா த⁴ரீ . தாரீல ஶ்ரீஹரி மாயபா³ப ..26..

 

  அதை உங்கள் மனதில் உறுதியாகப் பிடித்து, உங்கள் இதயத்தில் அவனைப் பிடித்துக் கொள்ளுங்கள்.  என் அம்மா அப்பா ‘ஸ்ரீஹரி’இந்த  உலக  வாழ்விலிருந்து நீங்கள் கரையுறுவதை உறுதி செய்வான்.

 

 பா³ப ஹா க்ருʼபாளு ப⁴க்தா பா⁴விகாம்ʼஸீ . க⁴ரீ ஹோய தா³ஸீ காமாரீ த்யா  ॥27॥

 

  அவன் தனது பக்தர்கள் மற்றும் பக்திமான்கள் மீது கருணையுள்ள தந்தை.  அவன் அவர்களின் சேவகனாக ஆகி மற்றும் அவரவரது குடியிருப்புகளில்  சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான்.

 

  த்யாசா பா⁴ர மாதா² சாலவீ ஆபுலா. ஜிஹீ த்யா தி³த⁴லா ஸர்வ பா⁴வ .. ॥28॥

 

  அவர்களுடைய சுமைகளையெல்லாம் சுமந்துகொண்டு அவர்கள் வாழ்க்கையை நடத்துகிறான் ;  தன்னை முழுமையாக சரணடைந்தவர்களுக்கு.

 

    .

 

பா⁴வேவிண ஜாணா நாஹீ த்யாசீ ப்ராப்தி . புராணே போ³லதீ ஐஸீ மாத ..29.. 

 

அவனுடன் பக்தி உணர்வு ரீதியான பிணைப்பு இல்லாமல், அவனை அடைய முடியாது.  அனைத்து ஆன்மீக நூல்களும் அதையே நமக்கு உணர்த்துகின்றன.

 

மாத த்யாசீ ஜயா ஆவடே³ ஜீவாஸீ. தயா க³ர்ப⁴வாஸீ நாஹீ யேணே ..30..

 

    யாருடைய மனம் அவனிடம் விருப்பத்தை வளர்க்கிறதோ, அவன்   மீண்டும் ஒரு கருவறையில் வசிக்க திரும்புவது இல்லை.

 

யாவே க³ர்ப⁴வாஸீ தரீ ச விஷ்ணுதா³ஸீ . உத்⁴தா³ர லோகாஸீ பூஜ்ய ஹோதீ  ॥31॥

 

  ஒரு ‘விஷ்ணுதாசர்’ கருவறைக்குத் திரும்பினாலும், அது மற்றவர்களை கரையேற்றுவதற்காகவும், அவர்களின் வழிபாட்டுக்கு உரியவராக இருக்கவுமே.

 

 ஹோதீ ஆவட³த ஜீவாசே தாஇத. த்யா க⁴டீ³ அச்யுத ந விஸம்பே⁴

 

 ॥32॥

 

  ‘அச்சுதன்’ அவர்களை, கழுத்தை அலங்கரிக்கும்’ தாயத்து’ பதக்கத்தைப் போல (தீயதைத் தடுக்க கை அல்லது கழுத்தில் அணிந்திருக்கும் சிறிய நீளமான வெள்ளி பதக்கத்தை) ஒரு கணம் கூட அவர்களை விட்டு விலகாமல் வைத்துக் கொள்வான்.

 

பே⁴தா³பே⁴த³ நாஹீ சிந்தா து³꞉க² காஹீ . வைகுண்ட² த்யா டா²யீ ஸதா³ வஸே ..33..

 

 அவர்கள் தங்கள் மனதில், கவலைகள் அல்லது வலிகள், மற்றவரிடம் தவறுகள், வேறுபாடுகள் எவற்றையும் வைத்துக்கொள்வதில்லை. .  ‘வைகுண்டம்’ எப்போதும் அவர்களுடன் இருந்துகொண்டே இருக்கிறது.

 

 

 

 வஸே தேதே² தே³வ ஸதா³ ஸர்வகாள . கரிதீ நிர்மள நாமகோ⁴ஷ ..34..

 

எங்கெங்கு இந்த நாமங்களின் தூய சங்கீதமும் பாடுதலும் நடக்கிறதோ,  பகவான் அங்கு எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்.

 

ஸம்பதா³ தயாஞ்சீ ந ஸரே கல்பாந்தீ. மேளவிலா ப⁴க்தீ தே³வலாப⁴ ..35..

 

    பக்தியையும் அதன் மூலம் பகவானையும் அடைந்தவர்களுக்கு யுகங்கள் கடந்தாலும் அவர்களின் செல்வம் அழியாது.

 

லாப⁴ தயா ஜாலா ஸம்ʼஸாரா யேஊனீ . ப⁴க³வந்த ரூʼணீ ப⁴க்தீ கேலா ..36.

 

அவர்கள் இவ்வுலகிற்கு வந்தது பெரும் நன்மை.  பக்தன் பகவான் மீது கொண்ட பக்தியின் காரணமாக பகவானை தனக்குக் கடனாளியாக்குகிறான்.

 

லாக³லேஸே பிஸே காய மூட⁴ஜனாம்ʼ . காய நாராயணா விஸரலீ ..37..

 

மந்த புத்தி கொண்ட உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா?  ‘நாராயண’ னை ஏன் மறந்துவிட்டீர்கள்?

 

விஸரலீ தயா தோ²ர ஜாலீ ஹாணீ . பசவில்யா கா²ணீ சௌற்யாஸீ

 

  ॥38॥

 

அவரை மறந்தது மிகப்பெரிய தீங்கு.  அது அவர்களை, 84 லட்சம்(84 லட்சம் வகை வாழ்க்கை வடிவங்களின்) யோனிகளாகப்  பிறக்க உறுதி செய்துள்ளது.

 

ஶிகவிலே தரீ நாஹீ கோணா லாஜ . லாக³லீஸே பா⁴ஜ த⁴ன கோ³ட³ ..39.. 

 

 ஒருவர் கற்பித்திருந்தாலும், அவர்கள் வெட்கப்படுவதில்லை.  அவர்கள் மனைவி, செல்வம் மற்றும் இவ்வுலகில் உள்ள மற்றவைகளால் மயங்கிக் கிடக்கிறார்கள்.

 

கோ³ட³ ஏக ஆஹே அவிட கோ³விந்த³ . ஆணீக தோ ச²ந்த³ நாஸிவந்த ..40..

 

 ‘இனிப்பு’ என்று ஒன்று இருந்தால் அது ‘கோவிந்தா’ என்ற நாமம் மட்டுமே.  மற்ற பழக்கவழக்கங்கள் அனைத்தும் அழிவுக்கு உட்பட்டவை.

 

தளமள த்யாசீ காஹீ தரீ கரா . கா ரே நித³ஸுரா பு³டா³வயா ..41..

 

  தயவு செய்து முயற்சி செய்து அதை அடைய ஏதாவது செய்யுங்கள்.  ஏன் அன்பர்களே!  நீங்கள் தூங்கியே இந்த அதிர்ஷ்டத்தை மூழ்கடிக்க விரும்புகிறீர்களா?

 

யா ஜனாஸீ ப⁴ய யமாசே நாஹீ . ஸாண்டி³யேலீ திஹீ ஏகராஜ்யே ..42

 

 இந்த மக்களுக்கு ‘யமனி’டம்  பயம் இல்லை.  அவனுக்காக தங்கள் ராஜ்ஜியத்தைக் கூட துறந்தவர்களும் உண்டு.

 

ஜேணே அக்³னிமாஜீ கா⁴தலாஸே பாவ . நேணதா தோ ராவ ஜனக ஹோதா ..43..

 

 தன் கால்களை நெருப்பில் போட்ட பிறகும், அவன் அதை உணரவில்லை – மன்னன் ‘ஜனகர்’.

 

தான பூ⁴க ஜிஹீ ஸாஹிலே ஆகா⁴த . தயா பாய ஹாத காய நாஹீ ..44..

 

  பசி, தாகம் தாங்காமல் துன்பங்களைச் சுமந்தவர்களுக்குக் கால்களும் பாதங்களும் இல்லையா என்ன?

 

நாஹீ ஐஸா திஹீ கேலா ஸம்ʼவஸார . து³꞉கா²சே டோ³ங்க³ர தோடா³வயா ..45..

 

  வலி என்ற மலையை உடைக்க, உலக வாழ்வை துறந்து, துடைத்தழித்தனர்.

 

யாச ஜன்மே க⁴டே³ தே³வாசே ப⁴ஜன . ஆணீக ஹே ஜ்ஞான நாஹீ கோடே² ..46..   

 

 இந்த ஜென்மத்தில்தான் பகவானின் திருநாமத்தைப் பாடுவதில் ஈடுபட முடியும்.  இந்த அறிவு வேறு எந்த ஜீவராசிக்கும் இல்லை..

 

கோடே² புடே⁴ நாஹீ க்⁴யாவயா விஸாவா . பி²ரோனி யா கா³வா ஆல்யாவிண..47

 

 ஓய்வெடுக்க இனி எங்கும் வாய்ப்பு இல்லை.  மீண்டும் இந்த இடத்திற்கு வர முடியாது.

 

வினவிதா தி³வஸ ப³ஹுத லாக³தீ . ம்ஹணஉனி சித்தீ தே³வ த⁴ரா ..48

 

நான் உன்னை வேண்டிக்கொள்கிறேன்;  அது நிறைய நேரம் எடுக்கும்.  ஆதலால் பகவானை இதயத்தில் நிலைநிறுத்துங்கள்.

 

த⁴ரா பாய தும்ஹீ ஸந்தாஞ்சே ஜீவாஸீ . வியோக³ தயாஸீ தே³வா நாஹீ ..49..

 

உங்கள் இதயத்தில் அன்பான ஸந்த்துக்களின் பாதங்களை இருத்திக் கொள்ளுங்கள்.  பகவான் அவர்களுடனேயே இருப்பவர்.

 

 நாஹீ சாட³ தே³வா ஆணீக ஸுகா²சீ . ஆவடீ³ நாமாசீ த்யாச்யா தயா..50

 

பகவான் வேறு எதற்கும் ஆசைப்படுவதில்லை.  அவர் தனது சொந்த நாமங்களில் விருப்பம் கொண்டவர்.

 

த்யாசீச உச்சி²ஷ்ட போ³லதோ உத்தரே . ஸாங்கி³தலே க²ரே வ்யாஸாதி³கீ ..51.

 

  நான் எதைச் சொன்னாலும் ‘ஸ்ரீ வியாசர்’ போன்றவர்களின் உண்மையான போதனைகளின் மிச்சம்தான்.

 

வ்யாஸே ஸாங்கி³தலே ப⁴க்தி ஹே சி ஸார . ப⁴வஸிந்து⁴ பார தராவயா ..52

 

சம்ஸாரப் பெருங்கடலைக் கடக்கக்கூடிய ஒரே சாராம்சம் ‘பக்தி’ என்று ‘ஸ்ரீ வியாசர்’ கூறியுள்ளார்.

 

 தராவயா ஜனா கேலே பா⁴க³வத . கோ³வள கோ³பீ ப⁴க்த மாதா பிதா ..53..

 

மக்களை கரையேற்றுவதற்காக, அவர் ‘பாகவதம்’ வழங்கினார், அதில் பசு மேய்ப்பவர்கள், ‘கோபிகள்’, ஒரு தாய் மற்றும் ஒரு தந்தை போன்றவர்களின் கதைகள் உள்ளன.

 

தாருனியா க²ரே நேலீ ஏக்யாஸரே . நிமித்தே உத்தரே ருʼஷீசியா ..54.

 

வால்மீகி ரிஷியின் போதனைகளின் , ஒரே அடியில், அனைத்து மக்களும் கரையேறினர்.

 

யாஸீ வர்ம டா²வே ப⁴க்தா தராவயா . ஜனனீ பா³ள மாயா ராகே² தான்ஹே ..55..

 

 இந்த உலக வாழ்க்கையை, ‘பக்தனை’ வாழவைப்பது  என்ற பகவானின்  ரகசியம், ஒரு தாய் தனது பாசத்தின் காரணமாக தனது குழந்தையை தெரிந்து கொண்டு  கவனித்துக்கொள்வதைப் போன்றது.

 

தான்ஹேலே பு⁴கேலே ம்ஹணே வேளோவேளா . ந மக³தா லளா ஜாணோனியா ..56..

 

 குழந்தை தாகமாகவும் பசியாகவும் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் சொல்கிறாள். அது கேட்காமலும், தன் செல்லக் குழந்தையைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டும்.

 

 ஜாணோனியா வர்ம தே³ட² லாவியேலா . த்³ரௌபதீ³ச்யா போ³லாஸவே தா⁴வே ..57..

 

 ‘திரௌபதி’ சொன்னதின் ரகசியத்தை அறிந்தவன், அவளிடம் ஓடிச்சென்று ஒரு இலையை வைத்தான்.

 

 தா⁴வே ஸர்வதா² தே⁴னு ஜைஸீ வத்ஸா . ப⁴க்தாலாகீ³ தைஸா நாராயண ..58..

 

 ஒரு பசு தன் கன்றுடன் ஓடுவது போல் ‘நாராயணன்’ தனது ‘பக்த’னுடன் ஓடுகிறான்.

 

நாராயண வ்ஹோவா ஹாவ ஜ்யாச்யா ஜீவா . த⁴ன்ய த்யாச்யா தை³வா பார நாஹீ ..59..

 

  ‘எனக்கு ‘நாராயணன்’ மட்டுமே வேண்டும்’ என்று ஏங்கும் இதயம் உண்மையில் பாக்கியமானது மற்றும் அவரது அதிர்ஷ்டத்திற்கு எல்லையே இல்லை.

 

பார நாஹீ ஸுகா² தே தி³லே தயாஸீ . அக²ண்ட³ வாசேஸீ ராமநாம ..60.. 

 

 தொடர்ந்து ‘ராம’ நாமத்தை உச்சரிப்பவருக்கு அவன் அளிக்கும் மகிழ்ச்சி இணையற்றது.

 

ராமநாம தோ³னீ உத்தம அக்ஷரே . ப⁴வானீ ஶங்கரே உபதே³ஶிலீ ..61..

 

 ‘ராம’ என்ற சொல் இரண்டு எழுத்துக்களைக் கொண்டுள்ளது, இவை ‘பவானி’ க்கு ‘சங்கரரால்’ உபதேசிக்கப்பட்டது.

 

உபதே³ஶ கரீ விஶ்வநாத² கானீ . வாராணஸீ ப்ராணீ மத்⁴யே மரே ..62..

 

  ‘வாராணஸி’யில் இறப்பவர்களின் காதுகளில் ‘விஸ்வநாதர்’ இதை உச்சரிக்கிறார்.

 

மரணாசே அந்தீ ராம ம்ஹணே ஜரீ . ந லகே³ யமபுரீ ஜாவே தயா ..63.. 

 

 இறக்கும் போது ராம நாமத்தை உச்சரித்தால் யமபுரிக்கு செல்ல வேண்டியதில்லை.

 

தயாஸீ உத்தம டா²வ வைகுண்டீ² . வஸே நாம சித்தீ ஸர்வகாள ..64.. 

 

எவனுடைய இதயம் எப்போதும் பகவானின் நாமத்தை நிலைநிறுத்துகிறதோ, அவனுடைய இருப்பிடம் உன்னதமான வைகுண்டம்.

 

ஸர்வகாள வஸே வைஷ்ணவாஞ்ச்யா க⁴ரீ . நஸே க்ஷணப⁴ரீ ஸ்தி²ர கோடே² ..65..

 

  அவர் எப்போதும் ஒரு ‘வைஷ்ணவ’னின் இல்லத்தில் வசிக்கிறார்;  ஒரு நொடி கூட இப்படி வேறு எங்கும் இடம் பெறாதவர்.

 

கோடே² நகா பாஹோ கரா ஹரிகதா² . தேதே² அவசிதா ஸாபடே³ல ..66..

 

‘ஹரிகதை’ நடக்கும் இடத்தைத் தவிர வேறு எங்கும் அவரைத் தேடாதீர்கள்;  நீங்கள் நிச்சயமாக அவரை அங்கு  அடைவீர்கள்.

 

ஸாபடே³ ஹா தே³வ பா⁴விகாஞ்சே ஹாதீ. ஶாஹாணே மரதீ தரீ நாஹீ ..67..

 

ஒரு பக்தனிடம்தான் இந்த பகவானைக் காண்பாய்.  மிகவும் அறிஞர்கள் ஆனாலும் பக்தி இல்லாவிட்டால், இறக்கும் போது கூட அவரை அடையமுடியாது.

 

நாஹீ ப⁴லே ப⁴க்தீ கேலியாவாசூனி. அஹந்தா பாபிணீ நாக³வண ..68..

 

  ‘பக்தி’ என்ற நல்ல விஷயத்தில் ஈடுபடாமல், நீங்கள் நல்லொழுக்கமுள்ள நபராக இருக்க முடியாது.  ஒருவரின் அகம்பாவம் பாபத்துக்கு அடிகோலும்.

 

நாக³வலோ ம்ஹணே தே³வ மீ ஆபணா . லாப⁴ தி³லா ஜனா ட²கலா தோ ..69..

 

  தன்னை பகவான் என்று சொல்லிக் கொள்பவன், தன்னையே கெடுத்துக் கொள்கிறான்.  அவன் மற்றவர்களுக்கு சில நன்மைகளை செய்திருக்கலாம், ஆனால் தான் நன்மை அடையவில்லை.

 

தோ சி தே³வ யேர நவ்ஹே ஐஸே காஹீ . ஜனார்த³ன டா²யீ சஹூ கா²ணீ ..70..

 

 அவரைத் தவிர வேறு பகவான் இல்லை என்பது சாத்தியமா?  படைப்பின் 4 வடிவங்களுக்கும் ‘ஜனார்த்தனனே’ தான் அடிப்படை.

 

கா²ணீ ப⁴ரூனியா ராஹிலாஸே ஆத . போ³லாவயா மாத டா²வ நாஹீ ..71..

 

ஒவ்வொரு வடிவமும் அவரால் உள்ளும் புறமும் நிரப்பப்பட்டு அதில் வசிக்கிறார்.  வேறு எதுவும் சாத்தியம்  இல்லை.

 

டா²வ நாஹீ ரிதா கோணீ தே³வாவிண . ஐஸீ தே ஸஜ்ஜன ஸந்தவாணீ ..72..

 

 பகவான் இல்லாத இடம்  இல்லை.  ஸந்த்துக்கள்   இதைத்தான் சொல்கின்றனர்.

 

 வாணீ போ³லூனியா கே³லீ ஏக புடே⁴ . தயாஸீ வாகுடே³ ஜாதா ட²கே ..73..

 

அவர்கள் இவ்வாறு உபதேசம் செய்து மேன்மை அடைந்தனர் .  இந்தப் போதனையைப் புறந்தள்ளியவர்கள் சிக்கிக் கொண்டனர்.

 

ட²கா நாஹீ அர்த² டா²உகா வேதா³ஞ்சா . ஹோஊனி பே⁴தா³சா தா³ஸ டே²லா ..74..

 

 வேதங்களின் சாரம் புரியாத சிலர் லௌகீக விஷயங்களில் மாட்டிக்கொண்டதுமன்றி பாரமார்த்திகம் புரிந்த மாதிரி  நடிக்கின்றனர். உண்மையில் அவர்கள் பேதத்துக்கு தாஸர்கள். நாம் எல்லோருமே சரீரம் வேறு ஆத்மா வேறு என்று பேத புத்தி உள்ளவர்கள், பேத தாஸர்கள். ஆனால் பாரமார்த்திகத்தில் இருந்து கொண்டு சிலர்  பேதத்துக்கு தாஸர்களாய்  இருக்கின்றனர்.

 

தா³ஸ டே²லா போட அர்த² த³ம்பா⁴ஸாடீ . ம்ஹணஉனி துடீ தே³வாஸவே ..75..

 

வயிறு நிரம்பவும், செல்வம் குவிக்கவும், இவ்வாறு தாஸர்கள் ஆனவர்கள் நயவஞ்சகர்களாகவும் மாறி பகவானிடம் இருந்து விலகி விடுகிறார்கள்.

 

 ஸவே தே³வ த்³விஜா தீஹீ து³ராவிலா . ஆணிகாஞ்சா ஆலா கோண பாட³ ..76..

 

 பிராமண பிரிவினரே பகவானிடமிருந்து விலகிவிட்டனர்.  பிறகு மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது?

 

பாட³ கரூனியா நாக³விலீ பா²ர . பண்டி³த வேவ்ஹார க²ளவாதீ³ ..77..

 

  இவ்வாறு நடந்து கொண்டு கொள்ளை அடித்ததால், ‘பண்டிட்’ , மோசடிகள்  நடத்தத் தலைப்படுகிறார்.

 

 வாத³கா நிந்த³கா தே³வாசே த³ருஶன . நவ்ஹே ஜாலா பூர்ண ஷட³கர்மீ ..78..

 

 வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் அடுத்தவர்களை அவமதிப்பவர்கள்  தங்கள் 6 கர்மாக்களை (சந்தியானனம், ஜபம், ஹோமம், தேவ பூஜை, ஆதித்யம், விஸ்வதேவம்) நிறைவேற்றினாலும் பகவானது தர்சனம் அவர்களுக்குக் கிட்டாது.

 

ஷட³கர்மீ ஹீன ராமநாம கண்டீ² . தயாஸவே பே⁴டீ ஸவே தே³வா ..79..

 

 இந்த 6 கர்மாக்களைக் கடைபிடிக்காவிட்டாலும்,  நெஞ்சில் ராம நாமத்தை வைத்திருந்தால், அவனை பகவான் சந்திப்பார்.

 

தே³வாஸீ ஆவடே³ பா⁴விக ஜோ போ⁴ளா . ஶுத்⁴த³ த்யா சாண்டா³ளா கருனி மானீ ..80..

 

 பக்தி  நிறைந்த, எளிமையான, நேர்மையான மற்றும் தன்னலமற்றவர்களை பகவான் விரும்புகிறார். அப்படிப்பட்டவர், ‘சண்டாளனா’க இருந்தாலும், தூய்மையானவராக இருந்தால், பகவானின் தயவைப் பெறுவார்.

 

  மானியேலா நாஹீ விஶ்வாஸ யா போ³லா . நாம கே⁴தா மலா யுக்தி தோ²டீ³ ..81..

 

நான் இப்போது சொல்வதெல்லாம் துணிச்சலாக  மற்றவர்கள் சொன்ன வார்த்தைகள் அல்ல.  பகவானின் நாமங்களை உச்சரிப்பதால் எனக்குள் உதித்த அனுபவங்கள் அவை.

 

யுக்த தோ²டீ³ மஜ து³ர்ப³ளாசீ வாசா . ப்ரதாப நாமாசா போ³லாவயா ..82..

 

  எனக்கு ஒரு பலவீனமான புத்திசாலித்தனம் உள்ளது, ஆனால் இதைப் பற்றி கொஞ்சம் பேசுகிறேன்.  பகவானின் நாமங்களின் பெருமையே என்னை இவ்வாறு பேச வைக்கிறது.

 

 போ³லதா பாங்க³ல்யா ஶ்ருதி நேதி நேதி . கு²ண்டலியா யுக்தி புடே⁴ த்யாச்யா ..83..

 

 எனவே ‘இது இல்லை’ ‘இது இல்லை’ என்று சொல்லும் ‘ஸ்ருதிகளுக்கு’ கூட பேச்சு தடைபடுகிறது, அதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில் புத்திசாலித்தனம் கூட முடங்குகிறது.

 

 புடே⁴ பார த்யாசா ந களே சி ஜாதா . பாஉலே தே³க²தா ப்³ரம்ஹாதி³கா ..84..

 

 ‘பிரம்ஹா’ போன்றவர்கள் கூட அதன் அடிச்சுவடுகளைப் பின்பற்ற முயன்றனர், அவர்களாலும்  காண முடியவில்லை.

 

 காய ப⁴க்தீபிஸே லாக³லே தே³வாஸீ . இச்சா² ஜ்யாசீ ஜைஸீ தைஸா ஹோய ..85..

 

 பகவானை ஆட்கொள்ளும் பக்தியின் மேல் என்ன ஒரு பைத்தியம்.  அதனால் அவர் விரும்பியது போல் அதுவாகவே மாறுகிறார்.

 

 ஹோய ஹா ஸகு³ண நிர்கு³ண ஆவடீ³ . ப⁴க்திப்ரிய கோ³டீ³ பே²டா³வயா ..86..

 

 உள்ளார்ந்த ‘நிர்குண’வானாக இருப்பவர், ‘பக்தி’ மீதான தனது விருப்பத்தினால் எழும் தனது இனிய கடனை வெளிப்படுத்தும் வகையில் ‘ஸகுண’த்தை அன்புடன் ஏற்றுக்கொள்கிறார்.

 

 யா பா³பாஸீ பா³ள போ³லே லாடே³ கோடே³ . கருனி வாகுடே³ முக² தைஸே ..87..

 

 ஒரு குழந்தை தன் தந்தையிடம் மழலையாக இருந்தாலும் அன்பாகப் பேசுவது போல.

 

தைஸே யாசகாசே ஸமாதா⁴ன தா³தா . ஹோய ஹா ராக²தா ஸத்த்வகாளீ ..88..

 

  அவ்வாறே பகவான் தன்னை நாடி வருபவர்களுக்கு அமைதியை வழங்கி , சோதனைக் காலங்களில் அவர்களைக் கவனித்துக் கொள்கிறான்.

 

 ஸத்த்வகாளீ காமா ந யேதீ ஆயுதே⁴ . ப³ள ஹா ஸம்ப³ந்த⁴ ஸைன்யலோக..89..

 

 சோதனை நேரத்தில், எந்த ஆயுதமும் உபயோகப்படாது.  அது போலவே பலம் , உறவுகளும், படைகளும் கூட பயன்படாது

 

 ஸைன்யலோக தயா தா³க²வீ ப்ரதாப . லோடலா ஹா கோப கோபாவரீ ..90..

 

 படைகள் கோபத்திற்கு கோபத்துடன் பதிலளிப்பதன் மூலம் மட்டுமே துணிச்சலைக் காட்டுகின்றன.

 

 கோபா மரண நாஹீ ஶாந்த ஹோய த்யாஸீ . ப்ரமாண ப⁴ல்யாஸீ ஸத்த்வகு³ணீ ..91..

 

 கோபம் தணியாது;  அதை அமைதிப்படுத்த முடியாது.  நல்ல மனிதர்களின் தூய்மையான குணங்களே நமக்குச் சான்று.

 

 ஸத்த்வ ரஜ தம ஆபண நாஸதீ . கரிதா ஹே ப⁴க்தி விடோ²பா³சீ ..92..

 

 ‘விட்டோபா’விடம் ‘பக்தி’ செய்யும் போது ‘ஸத்வ, ரஜஸ் மற்றும் தமஸ்’ ஆகிய 3 குணங்கள் தாமாகவே அழிந்துவிடும்.

 

சித்த ரங்க³லியா சைதன்ய சி ஹோய . தேதே² உணே காய நிஜஸுகா² ..93..

 

  இதயம் இவ்வாறு சீராகும் போது, அது பேரின்பமாக மாறும்.  இங்கு சுத்த பேரின்பத்திற்கு ஏதேனும் குறை ஏற்படுமா என்ன?

 

 ஸுகா²சா ஸாக³ரு ஆஹே விடேவரீ . க்ருʼபாதா³ன கரீ தோ சி ஏக ..94..

 

 அந்தச் செங்கலின் மேல் அமைதிக் கடல் நிற்கிறது.  அவர்  கருணையைப் பொழிகிறார், மேலும் அவர் ஒருவர் மட்டுமே.

 

ஏக சித்த த⁴ரூ விடோ²பா³சே பாயீ . தேதே² உணே காஹீ ஏக ஆம்ஹா ..95..

 

  முழு பக்தியுடன் ‘விட்டோபா’வின் சரணங்களை நெஞ்சில் பதிய வைப்போம்.  ஒரு குறை கூட நம்மால் உணர  முடியாது.

 

ஆம்ஹாஸீ விஶ்வாஸ யாசியா நாமாசா . ம்ஹணஉனி வாசா கோ⁴ஷ கரூ ..96..

 

 அவருடைய நாமங்களை மட்டுமே நாங்கள் நம்புகிறோம்.  எனவே அதை சத்தமாக சொல்வோம்.

 

 கரூ ஹரிகதா² ஸுகா²சீ ஸமாதி⁴ . ஆணிகாசீ பு³த்⁴தீ³ து³ஷ்ட நாஸே ..97

 

ஆழமான எல்லையில்லா ஆனந்தத்தை அளிக்கும் ‘ஹரி’யின் நாமங்களைப் பாடுவதிலும் சொல்வதிலும் ஈடுபடுவோம்.  இது தீய எண்ணங்களில் ஈடுபடும் போக்கையும் அழித்துவிடும்.

 

நாஸே ஸம்ʼவஸார லோக மோஹோ மாயா . ஶரண ஜா ரே தயா விடோ²பா³ஸீ ..98..

 

  அது உலக ஆசைகளையும் மாயையையும் அழித்து விடும். அன்பர்களே!  சென்று ‘விட்டோபா’விடம் அடைக்கலம் தேடுங்கள்.

 

ஸிகவிலே மஜ மூடா⁴ ஸந்தஜனீ . த்³ருʼட⁴ யா வசனீ ரா bஹிலோஸே ..99..

 

  நான் முட்டாள்தனமாக இருந்தாலும், நான் உறுதியாகக் கடைப்பிடித்த இந்தப் பாடங்களை ஸந்த்துக்கள் எனக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

 

ராஹிலோஸே த்³ருʼட⁴ விடோ²பா³சே பாயீ . துகா ம்ஹணே காஹீ ந லகே³ ஆதா ..100..

 

  நான் உறுதியாகவும்  விடாமலும் ‘விட்டோபா’வின் சரணங்களைப் பிடித்துக் கொண்டு இருக்கிறேன்.  இப்போது வேறு எதிலும் ஆசை இல்லை என்கிறார் ‘துகா’.

 

 

 

அபங்கம்.

 

பாண்டு³ரங்கா³ கரூ ப்ரத²ம நமன . து³ஸரே சரண ஸந்தாஞ்சியா..1..

 

யாஞ்ச்யா க்ருʼபாதா³னே கதே²சா விஸ்தாரு.பா³பா³ஜீ ஸத்³கு³ருதா³ஸ துகா ..2..

 

காய மாஜீ² வாணீ மானேல ஸந்தாம்ʼஸீ . ரஞ்ஜவூ சித்தாஸீ ஆபுலியா ..3..

 

யா மனாஸீ லாகோ³ ஹரிநாமாசா ச²ந்த³. ஆவடீ³ கோ³விந்த³ கா³வயாஸீ ..4..

 

 ஸீண ஜாலா மஜ ஸம்ʼவஸார ஸம்ப்⁴ரமே. ஸீதள யா நாமே ஜாலீ காயா..5..

 

யா ஸுகா² உபமா நாஹீ த்³யாவயாஸீ . ஆலே ஆகாராஸீ நிர்விகார ..6..

 

நித்ய தா⁴வே தேதே² நாமாசா க³ஜர . கோ⁴ஷ ஜயஜயகார ஆஇகதா ..7..

 

தாதடீ³ தே காய ஹரிகு³ண கா³ய . ஆணீக உபாய து³꞉க²மூள ..8..

 

மூள நரகாசே ராஜ்ய மதே³ மாதே . அந்தரே ப³ஹுத தே³வ து³ரீ ..9..

 

து³ரீ அந்தரலா நாமனிந்த³காஸீ . ஜைஸே கோ³சிடா³ஸீ க்ஷீர ராஹே ..10..

 

ஹே வாட கோ³மடீ வைகுண்டா²ஸீ ஜாதா . ராமக்ருʼஷ்ணகதா² தி³ண்டீ³ த்⁴வஜா ..11..

 

ஜாணதே தயாம்ʼநீ ஸாங்கி³தலே கரா . அந்தராஸீ வாரா ஆடூ³னியா ..12..

 

யாஸீ ஆஹே டா²வே பரி அந்த⁴ ஹோதீ . விஷயாசீ க²ந்தீ வாடே ஜனா ..13..

 

நாஹீ த்யா ஸுடலீ த்³ரவ்ய லோப⁴ மாயா . ப⁴ஸ்ம த³ண்ட³ சா²யா தருவராசீ ..14..

 

சித்த ஜ்யாசே புத்ர பத்னீ ப³ந்தூ⁴வரீ . ஸுடல ஹா பரி கைஸே ஜாணா ..15..

 

ஜாணதே நேணதே கரா ஹரிகதா² . தரால ஸர்வதா² பா⁴க மாஜீ² ..16..

 

மாஜீ² மஜ அஸே க⁴ட³லீ ப்ரசித . நஸேல பதித ஐஸா கோணீ ..17..

 

கோணீ தரீ காஹீ கேலே ஆசரண . மஜ யா கீர்தனேவிண நாஹீ ..18..

 

நாஹீ ப⁴ய ப⁴க்தா தராயா போடாசே . தே³வாஸீ தயாசே கரணே லாகே³ ..19..

 

லாகே³ பாடோ²வாடீ பாஹே பாயாம்ʼ கடே³ . பீதாம்ப³ர க²டே³ வாட ஜா²டீ³ ..20..

 

டி³ங்கோனியா கா ரே ராஹிலே ஹே லோக . ஹே சி கவதுக வாடே மஜ ..21..

 

ஜயானே தாரிலே பாஷாண ஸாக³ரீ . தோ த்⁴யா ரே அந்தரீ ஸ்வாமீ மாஜா²..22..

 

மாஜி²யா ஜீவாசீ கேலீ ஸோட³வண . ஐஸா நாராயண க்ருʼபாளு ஹா ..23..

 

ஹா சி மாஜா² நேம ஹா சி மாஜா² த⁴ர்ம . நித்ய வாசே நாம விடோ²பா³சே ..24..

 

சேதவலா அக்³னி தாபத்ரயஜ்வாள . தோ கரீ ஶிதள ராமநாம ..25..

 

மனா தீ⁴ர கரீ த்³ருʼட⁴ சித்தா த⁴ரீ . தாரீல ஶ்ரீஹரி மாயபா³ப ..26..

 

பா³ப ஹா க்ருʼபாளு ப⁴க்தா பா⁴விகாம்ʼஸீ . க⁴ரீ ஹோய தா³ஸீ காமாரீ த்யா ..27..

 

த்யாசா பா⁴ர மாதா² சாலவீ ஆபுலா. ஜிஹீ த்யா தி³த⁴லா ஸர்வ பா⁴வ ..28..

 

பா⁴வேவிண ஜாணா நாஹீ த்யாசீ ப்ராப்தி . புராணே போ³லதீ ஐஸீ மாத ..29..

 

மாத த்யாசீ ஜயா ஆவடே³ ஜீவாஸீ. தயா க³ர்ப⁴வாஸீ நாஹீ யேணே ..30..

 

யாவே க³ர்ப⁴வாஸீ தரீ ச விஷ்ணுதா³ஸீ . உத்⁴தா³ர லோகாஸீ பூஜ்ய ஹோதீ ..31..

 

ஹோதீ ஆவட³த ஜீவாசே தாஇத. த்யா க⁴டீ³ அச்யுத ந விஸம்பே⁴ ..32..

 

பே⁴தா³பே⁴த³ நாஹீ சிந்தா து³꞉க² காஹீ . வைகுண்ட² த்யா டா²யீ ஸதா³ வஸே ..33..

 

வஸே தேதே² தே³வ ஸதா³ ஸர்வகாள . கரிதீ நிர்மள நாமகோ⁴ஷ ..34..

 

ஸம்பதா³ தயாஞ்சீ ந ஸரே கல்பாந்தீ. மேளவிலா ப⁴க்தீ தே³வலாப⁴ ..35..

 

லாப⁴ தயா ஜாலா ஸம்ʼஸாரா யேஊனீ . ப⁴க³வந்த ரூʼணீ ப⁴க்தீ கேலா ..36..

 

லாக³லேஸே பிஸே காய மூட⁴ஜனாம்ʼ . காய நாராயணா விஸரலீ ..37..

 

விஸரலீ தயா தோ²ர ஜாலீ ஹாணீ . பசவில்யா கா²ணீ சௌற்யாஸீ ..38..

 

ஶிகவிலே தரீ நாஹீ கோணா லாஜ . லாக³லீஸே பா⁴ஜ த⁴ன கோ³ட³ ..39..

 

கோ³ட³ ஏக ஆஹே அவிட கோ³விந்த³ . ஆணீக தோ ச²ந்த³ நாஸிவந்த ..40..

 

தளமள த்யாசீ காஹீ தரீ கரா . கா ரே நித³ஸுரா பு³டா³வயா ..41..

 

யா ஜனாஸீ ப⁴ய யமாசே நாஹீ . ஸாண்டி³யேலீ திஹீ ஏகராஜ்யே ..42..

 

ஜேணே அக்³னிமாஜீ கா⁴தலாஸே பாவ . நேணதா தோ ராவ ஜனக ஹோதா ..43..

 

தான பூ⁴க ஜிஹீ ஸாஹிலே ஆகா⁴த . தயா பாய ஹாத காய நாஹீ ..44..

 

நாஹீ ஐஸா திஹீ கேலா ஸம்ʼவஸார . து³꞉கா²சே டோ³ங்க³ர தோடா³வயா ..45..

 

யாச ஜன்மே க⁴டே³ தே³வாசே ப⁴ஜன . ஆணீக ஹே ஜ்ஞான நாஹீ கோடே² ..46..

 

கோடே² புடே⁴ நாஹீ க்⁴யாவயா விஸாவா . பி²ரோனி யா கா³வா ஆல்யாவிண..47..

 

வினவிதா தி³வஸ ப³ஹுத லாக³தீ . ம்ஹணஉனி சித்தீ தே³வ த⁴ரா ..48..

 

த⁴ரா பாய தும்ஹீ ஸந்தாஞ்சே ஜீவாஸீ . வியோக³ தயாஸீ தே³வா நாஹீ ..49..

 

நாஹீ சாட³ தே³வா ஆணீக ஸுகா²சீ . ஆவடீ³ நாமாசீ த்யாச்யா தயா..50..

 

த்யாசீச உச்சி²ஷ்ட போ³லதோ உத்தரே . ஸாங்கி³தலே க²ரே வ்யாஸாதி³கீ ..51..

 

வ்யாஸே ஸாங்கி³தலே ப⁴க்தி ஹே சி ஸார . ப⁴வஸிந்து⁴ பார தராவயா ..52..

 

 

 

தராவயா ஜனா கேலே பா⁴க³வத . கோ³வள கோ³பீ ப⁴க்த மாதா பிதா ..53..

 

தாருனியா க²ரே நேலீ ஏக்யாஸரே . நிமித்தே உத்தரே ருʼஷீசியா ..54..

 

யாஸீ வர்ம டா²வே ப⁴க்தா தராவயா . ஜனனீ பா³ள மாயா ராகே² தான்ஹே ..55..

 

தான்ஹேலே பு⁴கேலே ம்ஹணே வேளோவேளா . ந மக³தா லளா ஜாணோனியா ..56..

 

ஜாணோனியா வர்ம தே³ட² லாவியேலா . த்³ரௌபதீ³ச்யா போ³லாஸவே தா⁴வே ..57..

 

தா⁴வே ஸர்வதா² தே⁴னு ஜைஸீ வத்ஸா . ப⁴க்தாலாகீ³ தைஸா நாராயண ..58..

 

நாராயண வ்ஹோவா ஹாவ ஜ்யாச்யா ஜீவா . த⁴ன்ய த்யாச்யா தை³வா பார நாஹீ ..59..

 

பார நாஹீ ஸுகா² தே தி³லே தயாஸீ . அக²ண்ட³ வாசேஸீ ராமநாம ..60..

 

ராமநாம தோ³னீ உத்தம அக்ஷரே . ப⁴வானீ ஶங்கரே உபதே³ஶிலீ ..61..

 

உபதே³ஶ கரீ விஶ்வநாத² கானீ . வாராணஸீ ப்ராணீ மத்⁴யே மரே ..62..

 

மரணாசே அந்தீ ராம ம்ஹணே ஜரீ . ந லகே³ யமபுரீ ஜாவே தயா ..63..

 

தயாஸீ உத்தம டா²வ வைகுண்டீ² . வஸே நாம சித்தீ ஸர்வகாள ..64..

 

ஸர்வகாள வஸே வைஷ்ணவாஞ்ச்யா க⁴ரீ . நஸே க்ஷணப⁴ரீ ஸ்தி²ர கோடே² ..65..

 

கோடே² நகா பாஹோ கரா ஹரிகதா² . தேதே² அவசிதா ஸாபடே³ல ..66..

 

ரஸாபடே³ ஹா தே³வ பா⁴விகாஞ்சே ஹாதீ. ஶாஹாணே மரதீ தரீ நாஹீ ..67..

 

நாஹீ ப⁴லே ப⁴க்தீ கேலியாவாசூனி. அஹந்தா பாபிணீ நாக³வண ..68..

 

நாக³வலோ ம்ஹணே தே³வ மீ ஆபணா . லாப⁴ தி³லா ஜனா ட²கலா தோ ..69..

 

தோ சி தே³வ யேர நவ்ஹே ஐஸே காஹீ . ஜனார்த³ன டா²யீ சஹூ கா²ணீ ..70..

 

கா²ணீ ப⁴ரூனியா ராஹிலாஸே ஆத . போ³லாவயா மாத டா²வ நாஹீ ..71..

 

டா²வ நாஹீ ரிதா கோணீ தே³வாவிண . ஐஸீ தே ஸஜ்ஜன ஸந்தவாணீ ..72..

 

வாணீ போ³லூனியா கே³லீ ஏக புடே⁴ . தயாஸீ வாகுடே³ ஜாதா ட²கே ..73..

 

ட²கா நாஹீ அர்த² டா²உகா வேதா³ஞ்சா . ஹோஊனி பே⁴தா³சா தா³ஸ டே²லா ..74..

 

தா³ஸ டே²லா போட அர்த² த³ம்பா⁴ஸாடீ . ம்ஹணஉனி துடீ தே³வாஸவே ..75..

 

ஸவே தே³வ த்³விஜா தீஹீ து³ராவிலா . ஆணிகாஞ்சா ஆலா கோண பாட³ ..76..

 

பாட³ கரூனியா நாக³விலீ பா²ர . பண்டி³த வேவ்ஹார க²ளவாதீ³ ..77..

 

வாத³கா நிந்த³கா தே³வாசே த³ருஶன . நவ்ஹே ஜாலா பூர்ண ஷட³கர்மீ ..78..

 

ஷட³கர்மீ ஹீன ராமநாம கண்டீ² . தயாஸவே பே⁴டீ ஸவே தே³வா ..79..

 

தே³வாஸீ ஆவடே³ பா⁴விக ஜோ போ⁴ளா . ஶுத்⁴த³ த்யா சாண்டா³ளா கருனி மானீ ..80..

 

மானியேலா நாஹீ விஶ்வாஸ யா போ³லா . நாம கே⁴தா மலா யுக்தி தோ²டீ³ ..81..

 

யுக்த தோ²டீ³ மஜ து³ர்ப³ளாசீ வாசா . ப்ரதாப நாமாசா போ³லாவயா ..82..

 

போ³லதா பாங்க³ல்யா ஶ்ருதி நேதி நேதி . கு²ண்டலியா யுக்தி புடே⁴ த்யாச்யா ..83..

 

புடே⁴ பார த்யாசா ந களே சி ஜாதா . பாஉலே தே³க²தா ப்³ரம்ஹாதி³கா ..84..

 

காய ப⁴க்தீபிஸே லாக³லே தே³வாஸீ . இச்சா² ஜ்யாசீ ஜைஸீ தைஸா ஹோய ..85..

 

ஹோய ஹா ஸகு³ண நிர்கு³ண ஆவடீ³ . ப⁴க்திப்ரிய கோ³டீ³ பே²டா³வயா ..86..

 

யா பா³பாஸீ பா³ள போ³லே லாடே³ கோடே³ . கருனி வாகுடே³ முக² தைஸே ..87..

 

தைஸே யாசகாசே ஸமாதா⁴ன தா³தா . ஹோய ஹா ராக²தா ஸத்த்வகாளீ ..88..

 

ஸத்த்வகாளீ காமா ந யேதீ ஆயுதே⁴ . ப³ள ஹா ஸம்ப³ந்த⁴ ஸைன்யலோக..89..

 

ஸைன்யலோக தயா தா³க²வீ ப்ரதாப . லோடலா ஹா கோப கோபாவரீ ..90..

 

கோபா மரண நாஹீ ஶாந்த ஹோய த்யாஸீ . ப்ரமாண ப⁴ல்யாஸீ ஸத்த்வகு³ணீ ..91..

 

ஸத்த்வ ரஜ தம ஆபண நாஸதீ . கரிதா ஹே ப⁴க்தி விடோ²பா³சீ ..92..

 

 சித்த ரங்க³லியா சைதன்ய சி ஹோய . தேதே² உணே காய நிஜஸுகா² ..93..

 

ஸுகா²சா ஸாக³ரு ஆஹே விடேவரீ . க்ருʼபாதா³ன கரீ தோ சி ஏக ..94..

 

ஏக சித்த த⁴ரூ விடோ²பா³சே பாயீ . தேதே² உணே காஹீ ஏக ஆம்ஹா ..95..

 

ஆம்ஹாஸீ விஶ்வாஸ யாசியா நாமாசா . ம்ஹணஉனி வாசா கோ⁴ஷ கரூ ..96..

 

கரூ ஹரிகதா² ஸுகா²சீ ஸமாதி⁴ . ஆணிகாசீ பு³த்⁴தீ³ து³ஷ்ட நாஸே ..97..

 

நாஸே ஸம்ʼவஸார லோக மோஹோ மாயா . ஶரண ஜா ரே தயா விடோ²பா³ஸீ ..98..

 

ஸிகவிலே மஜ மூடா⁴ ஸந்தஜனீ . த்³ருʼட⁴ யா வசனீ ரா bஹிலோஸே ..99..

 

ராஹிலோஸே த்³ருʼட⁴ விடோ²பா³சே பாயீ . துகா ம்ஹணே காஹீ ந லகே³ ஆதா ..100..

Panduranga karoo pradhama naman


Abhang Saahityam Curator: Sri Pundalik Maharaj Dehukar, a descendant of Sant Tukaram 

Bhaavaartha: Mumbai Sri Srinivasa Bhagavatar    

Editors : Smt Poornima Srikanth, Tripunithura, Smt Vishaka Srinivasan, Mumbai      

Tamil Translation: Smt Vasantha Srinivasan, Bengaluru     

Co-ordinator: V R Radhakrishnan, Chennai


Comments

Popular posts from this blog

Haripath of Sant Jnaneshwar Mavuli - Lyrics in Marathi & Meanings in English

Kanadiya Vithoba Kanadiya